தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு
திருக்கோவிலூர்: திருக்கோவிலுார் அருகே தந்தையை தாக்கிய மகன் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருக்கோவிலுார் அடுத்த அத்தண்டமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி, 60; இவரது மகன் பிரபு, 37; கடந்த 9ம் தேதி இரவு பிரபு தனது தந்தை கலியமூர்த்தியிடம் சொத்தை எழுதி கேட்டு தகராறு செய்தார். இதற்கு ஆதரவாக பிரபு மனைவி இளவரசி, 29; மற்றும் அவரது உறவினர்கள் இரண்டு பேர் சேர்ந்து கலியமூர்த்தியை தாக்கினர். கலியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் பிரபு உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.