மேலும் செய்திகள்
சொத்து தகராறில் 6 பேர் மீது வழக்கு
30-May-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே நிலம் தொடர்பான தகராறில் இரு தரப்பைச் சேர்ந்த 17 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் காட்டுகொட்டாய் சேர்ந்தவர் பழனிவேல் மகன் மோகன்,36; இவருக்கும் பரங்கிநத்தம் கிராமத்தை சேர்ந்த பழனியப்பன் மகன் வேலுசாமி,50; என்பவருக்கும் நிலம் சம்மந்தமாக பிரச்னை உள்ளது.கள்ளக்குறிச்சி கோர்ட்டில் வழக்கு நடந்து வந்த நிலையில் வேலுசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனையடுத்து மோகன், நிலம் தொடர்பாக மீண்டும் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த 16ம் தேதி இரவு 8:30 மணிக்கு இரு தரப்பினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் ஆயுதங்களால் தாக்கி கொண்டனர். இது தொடர்பாக இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வேலுசாமி தரப்பில் ராஜசேகர், சுதா, அண்ணாதுரை, காமராஜ், மணிகண்டன், சுரேஷ், சீனிவாசன், கீர்த்தி, சாந்தி உள்ளிட்ட 10 பேர் மீதும், மோகன் தரப்பில் குமார், கலைச்செல்வி, சந்தோஷ், வெங்கடேஷ் உட்பட 7 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
30-May-2025