மேலும் செய்திகள்
மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
18-Oct-2025
கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி, வடக்கனந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி கல்வி துறை சார்பில் நடந்த மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில், குறுவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 14, 17,19 வயது என மூன்று பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. வடக்கனந்தல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த போட்டியினை பள்ளி தலைமையாசிரியர் பொறுப்பு ஜெயந்தி துவக்கி வைத்தார். உடற்கல்வி இயக்குனர்கள் ராதாகிருஷ்ணன், ஹரிஹரன், பாலாஜி, உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கர், லோகநாதன், பாலு, ஆறுமுகம், ஆதி, சாமிதுரை ஆகியோர் போட்டிகளை நடத்தினர். இதில் முதலிடம் பிடிக்கும் அணியினர் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
18-Oct-2025