உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெருமாள் கோவிலில் ஏகாதசி உற்சவம்

பெருமாள் கோவிலில் ஏகாதசி உற்சவம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில் ஏகாதசி உற்சவம் நடந்தது. கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலை, அம்மன் நகர் ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில், ஏகாதசி உற்சவத்தையொட்டி, நேற்று பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து, கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்தபின், சேவை சாற்றுமுறை, ஆராதனை நடந்தது. சகஸ்ரநாம அர்ச்சனையும், இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவில் பிரகாரத்தில் மீண்டும் வலம் வந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !