மேலும் செய்திகள்
பூச்சி மருந்து குடித்த முதியவர் பலி
08-Oct-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சாலையில் நடந்த முதியவர் அரசு பஸ் மோதி இறந்தார். கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சி சேர்ந்தவர் கோவிந்தராஜ், 80; இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள உழவர் சந்தையில் கடந்த 5 ஆண்டுகளாக வாட்ச்மேனாக வேலை செய்து வந்தார். நேற்று காலை 5:15 மணிக்கு வழக்கம்போல் பணிக்கு வந்தார். கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் வணிக வளாகம் அருகே கோவிந்தராஜ் நடந்த சென்றபோது, கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ் கோவிந்தராஜ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் அரசு பஸ் டிரைவர் கனியாமூர் சோலைமுத்து, 42; மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்
08-Oct-2025