விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் நாளை( 29ம் தேதி) நடக்க இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு;கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நவ., மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நாளை( 29ம் தேதி) நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தவிர்க்க இயலாத காரணங்களால் நாளை நடக்க இருந்த விவசாயிகள் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.