உள்ளூர் செய்திகள்

சிறுமி தற்கொலை

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே சிறுமி துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன் மகள் மீனா,16; இவர் கடந்த கல்வியாண்டில் நடந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாததால் வீட்டில் இருந்தார். அவரது பெற்றோர்கள் மீண்டும் படித்து தேர்வெழுதுமாறு மீனாவிடம் வற்புறுத்தியுள்ளனர். இதனால் மன உலைச்சலில் இருந்த மீனா நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இவரது தாய் சுதா, 45; அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை