உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் வக்ப் வாரிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். துணை செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் வெங்கடேசன், செயற்குழு நிர்வாகிகள் கலியபெருமாள் கஜேந்திரன், தேவேந்திரன் முன்னிலை வகித்தனர். இதில், சிறுபான்மை மக்களின் உரிமைகளை பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு பறிப்பதாகவும், அதனால், வக்ப் வாரிய சட்டத்தை திரும்ப பெறவும் வலியுறுத்தினர். இடைக்குழு செயலாளர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை