உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சர்வதேச அஞ்சல் சேவை மீண்டும் துவக்கம்

சர்வதேச அஞ்சல் சேவை மீண்டும் துவக்கம்

கள்ளக்குறிச்சி: அமெரிக்கா, கனடா நாடுகளுக்கான சர்வதேச அஞ்சல் சேவை மீண்டும் துவங்கப்பட்டு உள்ளதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். விருத்தாச்சலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; கடந்த சில மாதங்களாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வதேச அஞ்சல் சேவைகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கு 'ஸ்பீடு போஸ்ட்' மற்றும் 'பார்சல்' ஆகியவற்றை மீண்டும் அனுப்பலாம். அனுப்பும் பொருட்கள் இறக்குமதி விதிமுறைகளுக்கு உட்பட்டவையாக இருக்க வேண்டும். முகவரி, தொடர்பு விபரங்கள் கட்டாயம் குறிப்பிட வேண்டும். இது தொடர்பான கூடுதல் தகவல்களை அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு நேரில் சென்று கேட்டறியலாம் அல்லது www.indiapost.gov.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !