உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்க இலவச கண் சிகிச்சை முகாம்

கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்க இலவச கண் சிகிச்சை முகாம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில் 390 பேர் சிகிச்சை பெற்றனர். கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவ மையம், மாவட்ட பார்வை இழப்புத் தடுப்பு சங்கம் இணைந்து ரோட்டரி சங்க நுாற்றாண்டு மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. ரோட்டரி சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் (தேர்வு) செந்தில்குமார், துணை ஆளுநர் மூர்த்தி வாழ்த்துரை வழங்கினர். பொருளாளர் முருகன் வரவேற்றார், முகாமிற்கு நிதியுதவி வழங்கிய மகாலட்சுமி சாமில்-டிம்பர்ஸ் உரிமையாளர் முஸ்தபா சால்வை அணிவித்து கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டார். தொடர்ந்து கோவை சங்கரா கண் மருத்துவ மைய டாக்டர்கள் உப்பாளி, நீரஜா ஆகியோர் முகாமில் பங்கேற்ற 390 பேருக்கு சிகிச்சை அளித்தனர். அதில் 98 பேர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு கோவை சங்கரா கண் மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். முகாமிற்கான பணிகளை ரோட்டரி நிர்வாகிகள் ராமலிங்கம், கோவிந்தன், பாண்டியன், உதயகுமார், கண்ணன், கந்தசாமி, முத்துராமலிங்கம், அம்பேத்கர், சேகர், கோபாலகிருஷ்ணன், சுப்பிரமணியன் ஆகியோர் மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ