உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற நபர் கைது

 டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற நபர் கைது

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே அரசு டாஸ்மாக் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். திருக்கோவிலுார் அடுத்த கீழத்தாழனுார் கிராமத்தில் டாஸ்மாக் மது பாட்டில்களை வாங்கி வீட்டில் பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் திருக்கோவிலுார் சப் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஏழுமலை மகன் எழில், 30; வீட்டில் இருந்து 11 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிந்து எழிலை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை