உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / போக்சோ வழக்கு வாலிபர் தற்கொலைக்கு முயற்சி

போக்சோ வழக்கு வாலிபர் தற்கொலைக்கு முயற்சி

உளுந்துார்பேட்டை,; போக்சோ வழக்கில் தேடப்பட்ட வாலிபர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி அடுத்த புதுப் பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலை ,30; பொறியியல் பட்டதாரியான இவர், பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் கடந்த 6ம் தேதி திருமலை மீது போக்சோ வழக்கு பதிந்து தேடி வந்தனர். போலீசாருக்கு பயந்து திருமலை நேற்று முன்தினம் காலை 7 மணி அளவில் உளுந்துார்பேட்டையில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். உடன் அவரைக் காப்பாற்றி உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உளுந்துார்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை