/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விஜயகாந்த் முயற்சியால் கட்டிய பாலம் பிரேமலதா தொட்டு வணங்கி நெகிழ்ச்சி
விஜயகாந்த் முயற்சியால் கட்டிய பாலம் பிரேமலதா தொட்டு வணங்கி நெகிழ்ச்சி
ரிஷிவந்தியம்,; ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த் முயற்சியால் கட்டப்பட்ட பாலத்தை பிரேமலதா தொட்டு வணங்கிச் சென்றார். 'உள்ளம் தேடி; இல்லம் நாடி' என்ற பெயரில் தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா தமிழகம் முழுதும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று ரிஷிவந்தியம் தொகுதி ஜி.அரியூர் மற்றும் மணலுார்பேட்டையில் தொண்டர்களை தொண்டர்களை சந்தித்து பேசியவர் பகண்டை கூட்ரோட்டிற்கு புறப்பட்டார். அப்போது, ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட மணலுார்பேட்டையில் கடந்த 2011-14 ஆண்டில் எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயகாந்த், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, 21 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக உயர்மட்ட பாலம் கட்டினார். அந்த பாலம் வழியாக சென்ற பிரேமலதா, பிரசார வாகனத்தில் இருந்து இறங்கி, பாலத்தை தொட்டு வணங்கி பின் புறப்பட்டு சென்றார்.