மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
சங்கராபுரம்; சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு அரசு மேல்நிலை பள்ளியில் திருக்குறள் ஒப்பித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ராமசாமி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ஏழுமலை வரவேற்றார். பி.டி.எ.,தலைவர் இளங்கோவன் அதிக அளவில் திருக்குறள் ஓப்பித்த மாணவ,மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.நிகழ்ச்சியில் அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ் சங்கத் தலைவர் செளந்தர்ராஜன்,மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.உதவி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.