மேலும் செய்திகள்
குறைகேட்பு கூட்டம்; 362 மனுக்கள் குவிந்தன
29-Oct-2024
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அதில் வருவாய் துறை, நிலப்பட்டா, நில அளவை, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைபட்டா, முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமை தொகை, கூட்டுறவு கடனுதவி, மருத்துவ துறை, குடிநீர், சாலை வசதி உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக 367 மனுக்கள் பெறப்பட்டது.தொடர்ந்து சம்மந்தப்பட்ட அரசு துறை அலுவலர்களிடம் விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
29-Oct-2024