ஆர் . கே . எஸ் ., பள்ளியில் ஊக்குவிப்பு பயிலரங்கம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான ஊக்குவிப்பு பயிலரங்கம் நடந்தது.கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜீசஸ்சுஜி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் தனலட்சுமி வரவேற்றார். ஆசிரியர் சந்தோஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார்.சிறப்பு அழைப்பாளராக டாக்டர் மனோபாலா, நிறுவனங்களின் இயக்குநர் சந்திரசேகர் பங்கேற்று, பேசினார். ஆசிரியர் ரவி, தாட்சாயினி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் ஐஸ்வர்யா நன்றி கூறினார்.