கள்ளக்குறிச்சி, வாணாபுரத்தில் ரேஷன் கார்டு குறைதீர்வு முகாம்
ரிஷிவந்தியம்: கள்ளக்குறிச்சி மற்றும் வாணாபுரம் தாலுகா அலுவலகங்களில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு சிறப்பு குறைதீர் முகாம் நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, குடிமைப் பொருள் தனி தாசில்தார் சரவணன் தலைமை தாங்கினார். இளநிலை வருவாய் ஆய்வாளர் ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தார். பொதுமக்களிடமிருந்து ரேஷன் கார்டில் புதிதாக பெயர் சேர்த்தல் 4, பெயர் நீக்குதல் 2, முகவரி மாற்றம் 2, குடும்ப தலைவர் பெயர் மாற்றம் 1, மொபைல் எண் மாற்றம் 11, பெயர் திருத்தம் 1, முகவரி திருத்தம் 3 தொடர்பாக மொத்தம் 24 மனுக்கள் பெறப்பட்டு, மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. வாணாபுரம் வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, வட்ட வழங்கல் அலுவலர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இளநிலை வருவாய் ஆய்வாளர் பழனி, தனி வருவாய் ஆய்வாளர் கார்மேகன் முன்னிலை வகித்தனர். முகாமில், பொதுமக்களிடமிருந்து ரேஷன் கார்டில் புதிதாக பெயர் சேர்த்தல், மொபைல் எண் மாற்றம் 15, முகவரி மாற்றம் 13, பிறந்த தேதி திருத்தம் 10, ரேஷன் கார்டு நகல் 2, அங்கீகார சான்று 1 என மொத்தம் 41 மனுக்கள் பெறப்பட்டு, அனைத்து மனுக்களுக்கும் உடனடி தீர்வு காணப்பட்டது.