சாலை மறியல்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தாலுகா, கூத்தக்குடி காலனி பகுதியில் உள்ள தெற்கு தெருவில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இங்கு கடந்த சில தினங்களாக குடிநீர் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தெற்கு தெருவை சேர்ந்த பொதுமக்கள் 10க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன், கள்ளக்குறிச்சி - வேப்பூர் சாலையில் நேற்று காலை 7.30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதையடுத்து காலை 7.45 மணியளவில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.