மேலும் செய்திகள்
பிரதோஷத்தை முன்னிட்டுஏகாம்பரேஸ்வரருக்கு பூஜை
12-Jan-2025
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
29-Dec-2024
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் , வீரட்டானேஸ்வரர் கோவிலில், சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்திகேஸ்வர பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், சனி பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு, பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர்க்கு மகா அபிஷேகம், அலங்காரம், 5:30 மணிக்கு, நந்திகேஸ்வரருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் நடந்தது. 6:00 மணிக்கு, பக்தர்களின் ஓம் நமச்சிவாயா கோஷம் முழங்க, வீரட்டானேஸ்வரர், நந்திகேஸ்வர பெருமானுக்கு ஒருசேர சோடசோபவுபச்சார தீபாரதனை நடந்தது.பிரதோஷ நாயகர் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி, தீபாரதனை, பக்தர்களின் சிவபுராணம் முழங்க பிரதோஷ நாயகர் கோவிலை வலம் வந்தார். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
12-Jan-2025
29-Dec-2024