அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
தியாகதுருகம்:தியாகதுருகம் அருகே அம்மன் கோவிலில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தியாகதுருகம் அடுத்த சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில், ஆனி அமாவாசையையொட்டி, நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன.கருவறையில் உள்ள பிரம்மாண்ட புற்றுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு உற்சவர் அம்மன் வசந்த மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளினார். தொடர்ந்து, பூசாரிகள் அம்மன் தாலாட்டு பாடல்களைப் பாடி ஆராதனை செய்தனர்.