உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மிலாடி நபி முன்னிட்டு டாஸ்மாக் நாளை மூடல்

மிலாடி நபி முன்னிட்டு டாஸ்மாக் நாளை மூடல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை 5ம் தேதி அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு; தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், அரசு மற்றும் தனியார் 'பார்'கள் அனைத்தும் மிலாடி நபியை முன்னிட்டு நாளை (5ம் தேதி வெள்ளிக்கிழமை) மூடப்பட வேண்டும். அரசு உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்தால், சம்மந்தப்பட்ட டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல் மதுபானம் விற்பனை செய்யும் 'பார்' களின் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகளும், 'பார்' உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி