உள்ளூர் செய்திகள்

சிறுமி மாயம்

கள்ளக்குறிச்சி; வரஞ்சரம் அருகே காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.வரஞ்சரம் அடுத்த சித்தலுார் கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி; 10ம் வகுப்பு படிக்கிறார். கடந்த 15ம் தேதி பொதுத்தேர்வு எழுத பள்ளிக்கு சென்ற சிறுமி, மாலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாய் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை