உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இரண்டு ஆடுகள் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை

இரண்டு ஆடுகள் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை

சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த சிறுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் இருசன், 64; இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பண்ணை கொட்டகை அமைத்து ஆடு மற்றும் மாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 26 ம் தேதி மாலை 6 மணி அளவில் இருசன் தனக்கு சொந்தமான இரண்டு மாடுகள் மற்றும் இரண்டு ஆடுகளை விவசாய நிலத்தில் உள்ள கொட்டகையில் கட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை சென்று பார்த்தபோது கொட்டகையில் கட்டி இருந்த 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில் கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ