மனைவி மாயம் கணவர் புகார்
கச்சிராயபாளையம் : கல்வராயன் மலையில் மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். கல்வராயன் மலையில் உள்ள குறத்தி குன்றத்தை சேர்ந்தவர் ஆண்டிமகன் சத்தியராஜ், 37; இவரது மனைவி கவுதமி, 35; இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கவுதமி நேற்று முன்தினம் இரவு 9:00 மணி அளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றார். அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து சத்தியராஜ் அளித்த புகாரின் பேரில், கரியாலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.