மேலும் செய்திகள்
குருணை மருந்து குடித்து விவசாயி தற்கொலை
01-Jul-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த தச்சு தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.கள்ளக்குறிச்சி தீப்பெட்டி தொழிற்சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 68; தச்சு தொழிலாளி. கடந்த ஜூன் 29ம் தேதி பகல் 2:00 மணிக்கு, வேலை முடிந்து சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார்.விளாந்தாங்கல் ரோடு அரசு பள்ளி மாணவர் விடுதி அருகே சென்றபோது திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த ராமலிங்கத்தை அவரது குடும்பத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமலிங்கம், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
01-Jul-2025