உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி

சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் ராமசாமி பேரணியை துவக்கினார். ஆசிரியர்கள் குமார், ஏழுமலை, சுரேஷ், இளையராஜா, ராமகிருஷ்ணன், பாலமுருகன், சுரேஷ், சம்சாத்பேகம் முன்னிலை வகித்தனர். ஓவிய ஆசிரியர் சவுந்தரராஜன் வரவேற்றார். மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் சின்னதம்பி மரக்கன்றுகளை வழங்கினார். உதவி தலைமையாசிரியர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ