பெரியபாளையத்து அம்மனுக்கு வரும் 15ல் தீமிதி திருவிழா
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி 22வது வார்டு திருக்காலிமேடு சின்ன வேப்பங்குளக்கரையில் உள்ள பெரியபாளையத்து அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா வரும் 15ல் நடக்கிறது.விழாவையொட்டி நாளை, காலை 9:00 மணிக்கு தீமிதிக்கும் பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்வு துவங்குகிறது. வரும் 15ம் தேதி, காலை 6:00 மணிக்கு கிராம தேவதை திருவாத்தியம்மன், பெரியபாளையத்து அம்மன் பூங்கரகம் வீதியுலாவும், பிற்பகல் 12:00 மணிக்கு கோவில் வளாகத்தில் அம்மன் வர்ணிப்புடன் கூழ்வார்த்தல் நடைபெறுகிறது.மாலை 3:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்தலும், இரவு 7:00 மணிக்கு சின்ன வேப்பங்குளக்கரையில் தீமிதி திருவிழாவும், இரவு 8:00 மணிக்கு திருவாத்தியம்மனும், பெரிய பாளையத்து அம்மனும் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இரவு 10:00 மணிக்கு அம்மன் வர்ணித்து கும்பம் படையிலடப்படுகிறது.