உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தடுப்பு இன்றி ஈஞ்சம்பாக்கம் தரைப்பாலம்

தடுப்பு இன்றி ஈஞ்சம்பாக்கம் தரைப்பாலம்

ஈஞ்சம்பாக்கம்:காஞ்சிபுரம் அடுத்த, ஈஞ்சம்பாக்கம் ஊராட்சியில், தபாஸ்தியா பார்க் குடியிருப்புகள் உள்ளன. இங்கு, ஆதிதிராவிட நலத்துறை மாணவியர் விடுதிவையொட்டி, மழைநீர் வடிகால்வாய் செல்கிறது.இக்கால்வாய் குறுக்கே, 16 அடி அகலத்திற்கு தரைப்பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த தரைப்பாலத்தின் வழியாக, தப்பாஸ்தியா பார்க் குடியிருப்புவாசிகள் வாகனங்களின் சென்று வருகின்றனர்.இந்த தரைப்பாலத்தின் இருபுறமும், தடுப்பு அமைக்கவில்லை. மேலும், மழைநீர் கால்வாய்யோரம் குப்பை கொட்டி சீர்கேடு ஏற்படுத்தி இருப்பதாக குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர்.எனவே, தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு கம்பி அமைக்க வேண்டும் என, தப்பாஸ்தியா பார்க் குடியிருப்பினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை