மேலும் செய்திகள்
உறுப்பினர் சேர்க்கை
02-Sep-2024
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாச மடத்தில் சைவ சித்தாந்த வகுப்பு துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. புலவர் சரவண சதாசிவம் வரவேற்றார்.ஆதீனத்தின் 234வது பட்டம் குருமகாசந்நிதானம் ஆசியுரை வழங்கினார். மதுரை தவத்திரு சாந்தி குமாரசுவாமி அடிகளார், சென்னைப் பல்கலை ஆட்சிக் குழு உறுப்பினர் முனைவர் முருகன், ஆதீன ஆலோசனை குழுவின் தலைவர் முனைவர் விஜயராகவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.அதை தொடர்ந்து தருமை ஆதீனப் புலவர் முனைவர் அருணை பாலறாவாயன் சைவ சித்தாந்த அடிப்படை குறித்து சிறப்புரையாற்றி, சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார்.
02-Sep-2024