காஞ்சி காமாட்சியம்மன் கோவில் உண்டியல் வருவாய் ரூ.83 லட்சம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வாயிலாக எண்ணப்பட்டு வருகிறது.அதன்படி, கோவிலில் உள்ள உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு, கோவில் ஸ்ரீகார்யம் சுந்தரேச அய்யர், செயல் அலுவலர் சீனிவாசன், ஹிந்து சமய அறநிலையத் துறை சரக ஆய்வர் ஆகியோர் முன்னிலையில், பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வாயிலாக எண்ணப்பட்டன.இதில், 83 லட்சத்து 72,350 ரூபாய் ரொக்கமும், 325 கிராம் தங்கமும், 1,225. கிராம் வெள்ளியும் கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளது என, கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் தெரிவித்தார்.