குமரகோட்டம் முருகனுக்கு வெள்ளி வேல் காணிக்கை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முருக பக்தர்களான ராஜ்குமார் - செல்வி தம்பதியர், குமரகோட்டம் முருகன் கோவிலுக்கு வெள்ளி வேல் ஒன்றை காணிக்கையாக வழங்க முடிவு செய்தனர்.அதன்படி, 1,071 கிராம் வெள்ளியில், நான்கு அடி நீளத்தில் வேல் ஒன்றை புதிதாக தயார் செய்து, ராஜ்குமார் - செல்வி தம்பதியர், குமரகோட்டம் முருகன் கோவில் செயல் அலுவலர் கேசவனிடம், நேற்று காணிக்கையாக வழங்கினர்.