மேலும் செய்திகள்
துார்ந்து கிடக்கும் மழைநீர் கால்வாய்
31-Jan-2025
சிங்காடிவாக்கம்:வாலாஜாபாத் ஒன்றியம், சிங்காடிவாக்கம் ஊராட்சியில் உள்ள விவசாய நிலங்களில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், மருதம் செல்லும் சாலையில் குறுக்கே வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயை ஊராட்சி நிர்வாகம் முறையாக துார்வாரி சீரமைக்காததால், இக்கால்வாயில், கோரைபுற்கள், செடி, கொடிகள் வளர்ந்து கால்வாயில் நீர்வழித்தடம் துார்ந்த நிலையில் உள்ளது.இதனால், மழை பெய்தால், இக்கால்வாய் வாயிலயாக வெளியேற வேண்டிய மழைநீர், விவசாய நிலங்களை சூழும் நிலை உள்ளது. எனவே, கால்வாயை துார்வாரி சீரமைக்க வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
31-Jan-2025