மேலும் செய்திகள்
மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
16-Feb-2025
செவிலிமேடு:காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு, இந்திரா நகரில் பெய்யும் மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில், செவிலிமேடு --- ஓரிக்கை செல்லும் பிரதான சாலையோரம், வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இக்கால்வாயை முறையாக பராமரிக்காததால், கால்வாயில் செடி, கொடிகளாலும், மண்திட்டுகளாலும் கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது.இதனால், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய கழிவுநீர், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது.எனவே, செவிலிமேடு, இந்திரா நகர் அருகில் உள்ள வடிகால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
16-Feb-2025