உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / லாரி - பஸ் மோதி 10 பேர் காயம்

லாரி - பஸ் மோதி 10 பேர் காயம்

காஞ்சிபுரம், சென்னை கோயம்பேடில் இருந்து, 30க்கும் மேற்பட்ட பயணியருடன், காஞ்சிபுரத்தை நோக்கி அரசு பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. ஸ்ரீபெரும்புதுார் அடுத்த பென்னலுார் அருகே, சாலையை கடக்க நின்றிருந்த லாரி மீது பேருந்து மோதியது. இதில், அரசு பேருந்து முன்பகுதி சேதமடைந்தது. மேலும், பேருந்தில் பயணம் செய்த ஆறு பெண்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வழக்கு பதிந்த ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை