மேலும் செய்திகள்
கூடலுாரில் சிறப்பு மருத்துவ முகாம்
02-Nov-2025
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, மாநகராட்சி சார்பில், காஞ்சியில் நேற்று நடந்த சிறப்பு மருத்துவ முகாமில், 2,118 பேர் பங்கேற்றனர். காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் காஞ்சிபுரம் ஓரிக்கை, அரசு நகரில் உள்ள விக்டோரிய மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி முகாமை துவக்கி வைத்தார். இதில், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, மகளிர், மகப்பேறு, இதயம், நரம்பியல், தோல், பல், கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம், முடநீக்கியல், நுண்கதிர், நுரையீரல், சர்க்கரை உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில், 2,118 பேர் பங்கேற்றனர். இதில் ஐந்து மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, கட்டுமான தொழிலாளர் நலவாரிய தொழிலாளர்கள் 4 பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணையை கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார். இம்முகாமில் மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில், மருத்துவ குழுவினர் உட்பட பலர் பங்கேற்றனர்.
02-Nov-2025