உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தமிழ் திறனறி தேர்வில் 231 பேர் ஆப்சென்ட் 

தமிழ் திறனறி தேர்வில் 231 பேர் ஆப்சென்ட் 

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 231 மாணவ - மாணவியர், தமிழ் திறனறி தேர்வு எழுத வரவில்லை என, கல்வித் துறையினர் தெரிவித்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், 50 அரசு உயர்நிலைப்பள்ளி, 51 மேல்நிலைப்பள்ளி, 20 அரசு உதவி பெறும் பள்ளிகள் என, மொத்தம் 121 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், 40,000 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும், மாணவ - மாணவியருக்கு நேற்று, தமிழ் திறனறி தேர்வு, தமிழகம் முழுதும் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 15 தேர்வு மையங்களில், 4,910 பேர் திறனறி தேர்வு எழுத ஒதுக்கீடு செய்தனர். இதில், 4,679 மாணவ - மாணவியர் தமிழ் திறனறி தேர்வு எழுதினர். மீதம், 231 பேர் தேர்வு எழுத வரவில்லை. இவர்களுக்கு, மேல்நிலைப் பள்ளிகளில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை கிடைக்காது என, கல்வித் துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ