உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / டேக்வாண்டோ பிளாக் பெல்ட் தகுதி தேர்வில் 8 பேர் வெற்றி

டேக்வாண்டோ பிளாக் பெல்ட் தகுதி தேர்வில் 8 பேர் வெற்றி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பல்லவர் டேக்வாண்டோ அமைப்பு சார்பில், காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த 'பிளாக் பெல்ட்' எனப்படும் கருப்பு பட்டைக்கான தகுதி போட்டி தேர்வில், எட்டு மாணவ - மாணவியர் வெற்றி பெற்றனர். காஞ்சிபுரம் பல்லவர் டேக்வாண்டோ அமைப்பு சார்பில், 'பிளாக் பெல்ட்' எனப்படும் கருப்பு பட்டைக்கான தகுதி போட்டி தேர்வு அமைப்பு செயலர் கணேஷ் பயிற்றுநர்கள் அஜித்குமார், கமல், சரத், யுவஸ்ரீ தலைமையில் நேற்று நடந்தது. இதில், 28 மாணவ - -மாணவியர் போட்டியில் பங்கேற்றனர். இதில், எட்டு மாணவ - மாணவியர் கருப்பு பட்டை பெற தகுதி பெற்றனர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டாக்டர் செல்வகுமார் தகுதி பெற்ற மாணவ - மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ், நினைவு பரிசு மற்றும் கருப்பு பட்டை அணிவித்து கவுரவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை