தாறுமாறாக திரும்பும் வாகனங்களால் ஒரகடத்தில் விபத்து அபாயம்
ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடத்தில் ஒரகடம் உள்ளது. இப் பகுதியைச் சுற்றி, 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, ஸ்ரீபெரும்புதார் சாலைகளை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான வாகனங்களில் ஊழியர்கள் தினமும் ஒரகடம் வந்து செல்கின்றனர்.இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில், சிங்கபெருமாள் கோவில் மார்க்கமாக இருந்து வரும் வாகனங்கள், வண்டலுார், தாம்பரம் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல, மேம்பாலத்தின்கீழ் திரும்பம் இல்லாததால், இரண்டு கி.மீ., துாரம் மாத்துார் அருகே சென்று, ‛யூ -டர்ன்' எடுத்து மீண்டும் ஒரகடம் வந்து, இடது பக்கம் திரும்பி, வண்டலுார் - வாலாஜாபாத் சாலை வழியே வாகனங்கள் சென்று வந்தன.இதனால், நேரம் விரையம் மற்றும் வாகனங்களின் எரிபொருள் வீணகுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்து வந்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு, இந்த சாலையில், மெர்குரி தனியார் ஹோட்டல் அருகே, நெடுஞ்சாலையின் மீடியனை உடைத்து, புதியதாக, ‛யூ -டர்ன்' ஏற்படுத்தப்பட்டது.இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில், எதிர் திசையான ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, அதிவேகமாக வரும் வாகனங்கள், இந்த இடத்தில், 'யூ -டர்ன்' எடுக்கும் வாகனங்களின் மீது மோதி விபத்து ஏற்பட்டு வருகின்றன.இதனால், தினமும் காலை, மாலை நேரங்களில் கடுமையான வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, வாகனங்களை ஒழுங்குப்படுத்த, அப்பகுதியில் போலீசார் நியமிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.