உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் சேர விண்ணப்பம் வரவேற்பு

பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் சேர விண்ணப்பம் வரவேற்பு

காஞ்சிபுரம்:பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 17 பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியர் விடுதிகள் இயங்கி வருகின்றன.நான்காம் வகுப்பு முதல் பிளஸ் 2 மற்றும் கல்லுாரி, பாலிடெக்னிக், பொறியியல் கல்லுாரி படிக்கும் மாணவ - -மாணவியர் இந்த விடுதிகளில் தங்கி படிக்க விண்ணப்பிக்கலாம்.விடுதியில் சேர விரும்பும் மாணவ- - மாணவியரின் பெற்றோர், பாதுகாவலர்களின் ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். விடுதிக்கும், கல்வி பயிலும் இடத்திற்கும் 8 கி.மீ., மிகாமல் இருக்க வேண்டும்.தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், விடுதி காப்பாளர்களிடம் ஜூன் -18ம் தேதிக்குள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஜூலை- 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இலங்கை தமிழர்களின் குழந்தைகள், குழந்தை தொழிலாளர்களை எவ்வித நிபந்தனையும் இன்றி சேர்க்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை