ஆட்டோ ஓட்டுநர் உடல் மணிமங்கலம் ஏரியில் மீட்பு
படப்பை:படப்பை அருகே, மணிமங்கலம் கிராமம், ஆலடி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை, 40; ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனர்.நேற்று முன்தினம் இரவு, மணிமங்கலம் ஏரிக்கரை பகுதியில் மது குடிக்க சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.நேற்று, அவரை தேடிச் சென்ற உறவினர்கள், லேசான காயங்களுடன் ஏரி நீரில் மிதந்து கொண்டிருந்த ஏழுமலையின் உடலை கண்டுபிடித்தனர்.இதையடுத்து, மணிமங்கலம் போலீசார் ஏழுமலை உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஏரிக்கரையில் மது அருந்திய ஏழுமலை, போதை அதிகமாகி தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.