மின் கம்பியில் உரசும் மரக்கிளைகளை அகற்ற புத்தேரியினர் வலியுறுத்தல்
புத்தேரி:புத்தேரி ஊராட்சி, மேட்டு தெரு பிரதான சாலையில், மின் கம்பியில் உரசும் மரக்கிளையை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சி, மேட்டு தெருவிற்கு செல்லும் பிரதான சாலையோரம், அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்க, சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில், சாலையோரம் உள்ள தான்றி மரத்தின் கிளைகள் மின் கம்பிகளை உரசும் வகையில் வளர்ந்துள்ளது. காற்றடிக்கும்போது மரக்கிளைகள் மின் கம்பியில் ஒன்றுடன் ஒன்று உரசும்போது, அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிப்பு ஏற்படுவதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.மேலும், மழைக்காலங்களில் தீப்பொறி ஏற்பட்டு மின் கம்பி அறுந்து விழுந்தால், மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, மின் கம்பிகளை உரசும் வகையில் வளர்ந்துள்ள தான்றி மரக்கிளைகளை அகற்ற, மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புத்தேரியினர் வலியுறுத்தி உள்ளனர்.