சிப்காட் சாலையில் சாய்ந்துள்ள மரத்தினால் அச்சம்
ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில், எறையூர் செல்லும் சிப்காட் சாலை வழியே ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தவிர, எறையூர், வைப்பூர் கிராம மக்கள் இந்த சிப்காட் சாலை வழியே தினமும் சென்று வருகின்றனர். இந்த சாலையில், 'டுவான்' தொழிற்சாலை அருகே, சாலையோரம் வளர்ந்தள்ள சீமை கருவேல மரம், சிப்காட் சாலையில் சாய்ந்து உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர். இரவு நேரத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், சாலையில் சாய்ந்துள்ள சீமை கருவேல மரத்தில் மோதி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சிப்காட் சாலையில் சாய்ந்துள்ள மரத்தை அகற்ற வேண்டும். -- சி.முருகன், ஒரகடம்.