உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையில் நடுவே ஓய்வெடுக்கும் மாடுகளால் விபத்தில் அபாயம்

சாலையில் நடுவே ஓய்வெடுக்கும் மாடுகளால் விபத்தில் அபாயம்

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் மாநில நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்காகன வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில், வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த நெடுஞ்சாலையில், காரணித்தாங்கல், செரப்பனஞ்சேரி, பனப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மாடுகளை கூட்டம் கூட்டமாக, சாலையில் வலம் வருவதோடு, சாலையில் நடுவே படுத்து ஓய்வெடுக்கிறது.மேலும், அவை திடீரென சாலையில் குறுக்கும் நெடுக்குமாக எழுந்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.இருசக்கர வாகன ஓட்டிகள், திடீரென சாலையின் குறுக்கே வரும் மாட்டின் மீது மோதி, விழுந்து காயமடைந்து வருவது வாடிக்கையாக உள்ளது.எனவே, நெடுஞ்சாலையில் விபத்திற்கு வழிவகுக்கும் வகையில் சுற்றித் திரிய விடும் மாட்டின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை