சாலையில் திரியும் மாடுகளால் போக்குவரத்திற்கு இடையூறு
காஞ்சிபுரம் நான்கு ராஜ வீதிகளை சுற்றியுள்ள பகுதியில், மாடு வளர்ப்போர், தங்களது மாடுகளை வீட்டில் கட்டி வைத்து பராமரிக்காமல், மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்டு விடுகின்றனர்..இம்மாடுகள் நான்கு ராஜ வீதிகளிலும், சுற்றித்திரிவதால், வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சாலையோரம் குப்பையில் கிடக்கும் உணவுக்காக மாடுகள் சண்டையிட்டுக் கொள்வதால், பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.எனவே, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.முத்துகுமார்,காஞ்சிபுரம்.