உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திருமால்பூர் கால்வாய் தடுப்பு சுவர் சேதம்

திருமால்பூர் கால்வாய் தடுப்பு சுவர் சேதம்

காஞ்சிபுரம்,:கர்நாடகா மாநிலத்தில் உற்பத்தியாகும் பாலாறு, ஆந்திரா மாநிலம் மற்றும் தமிழ்நாடு ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் வயலுார் முகத்துவாரத்தின் வழியாக வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.ராணிப்பேட்டை மாவட்டம், அணைகட்டு கால்வாய் வழியாக, காஞ்சிபுரம் மாவட்டம், தைப்பாக்கம் கம்பன் கால்வாயில், பாலாற்று நீர் சென்று, பல ஏரிகள் நிரம்புகின்றன.இதில், தைப்பாக்கம் கிராமத்தில் இருந்து, வதியூர், மேல்வேண்பாக்கம், கீழ்வேண்பாக்கம் ஆகிய கிராமங்களின் வழியாக, மக்ளின் கால்வாய் கோவிந்தவாடி அகரம் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது.அதே தண்ணீர், திருமால்பூர், நெல்வாய் ஏரிக்கு செல்லும் மாற்று கால்வாய் மதகு வழியாக செல்கிறது. இந்த மதகு தடுப்பு பலகை முறையாக பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. மேலும், திருகு ஆணி தடுப்பு சுவர் சேதம் ஏற்பட்டு உள்ளது.வட கிழக்கு பருவ மழை துவங்குவற்கு முன், மதகு தடுப்பு மற்றும் சிமென்ட் தடுப்பு சுவர் சீரமைக்க வேண்டும் என, திருமால்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராம விவசாயிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ