செடிகளால் துார்ந்த வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
அய்யங்கார்குளம்: அய்யங்கார்குளம் ஊராட்சியில், செடி, கொடிகள் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ள வடிகால்வாயால், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் ஊராட்சி, சஞ்சீவிராயர் கோவில் எதிரில், அப்பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இக்கால்வாயை முறையாக பராமரிக்காததால், கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்து, கால்வாய் என்பதற்கான அடையாளமே இல்லாத வகையில் மாறிவிட்டது. இதனால், பலத்த மழை பெய்தால், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர், குடியிருப்பு பகுதியை சூழும் நிலை உள்ளது. எனவே, செடிகள் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.