உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பொன்னியம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று துவக்கம்

பொன்னியம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று துவக்கம்

காஞ்சிபுரம்:பொன்னியம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று துவங்குகிறது. காஞ்சிபுரம் அடுத்த பெரிய நத்தம் கிராமத்தில், பொன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நடப்பாண்டு தசரா திருவிழா இன்று துவங்குகிறது. முதல் நாள் தேவி கருமாரியம்மன் அலங்காரம்; இரண்டாவது நாளில், காமாட்சியம்மன் அலங்காரம்; மூன்றாவது நாளில், அன்னபூரணி அலங்காரம்; நான்காவது நாளில், காமதேனு அலங்காரம்; ஐந்தாவது நாளில் கம்பா நதி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருள உள்ளார். ஆறாவது நாளில், மீனாட்சி அலங்காரம்; ஏழாவது நாளில், குபேர தனலட்சுமி அலங்காரம்; எட்டாவது நாளில் துர்கை அலங்காரம்; ஒன்பதாவது நாளில், சரஸ்வதி அலங்காரம்; 10வது நாளில் சந்தன அலங்காரத்தில் அம்மன் எழுந்தருள உள்ளார் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ