உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் வரும் 9ல் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சியில் வரும் 9ல் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், பெரிய அளவில் மற்றும் சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.அந்த வகையில், ஏப்ரல் மாதத்திற்கான வேலைவாய்ப்பு முகாம், வரும் 9ம் தேதி, காஞ்சிபும் கலெக்டர் வளாகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில், காலை 9:30 மணிக்கு நடைபெற உள்ளது.தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 1,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு நடத்த உள்ளனர். பட்டதாரிகள், டிப்ளமோ, ஐடிஐ, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர்.எனவே, 18 - 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.மேலும், விபரங்களுக்கு 044 -27237124 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி கேட்டுக்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ