மேலும் செய்திகள்
கண் மருத்துவ முகாம் 206 பேர் பங்கேற்பு
15-Sep-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சரஸ்வதி டியூஷன் சென்டர் மற்றும் பூந்தமல்லி நுாம்பல் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனை முகாம், காஞ்சிபுரத்தில் நாளை நடக்கிறது. பெரிய காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, சுரகரேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள தொண்டை மண்டல ஆதீனம் மடத்தில், நாளை, காலை 8:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை கண் மருத்துவ முகாம் நடக்கிறது. பூந்தமல்லி நுாம்பல் அரவிந்த் கண் மருத்துவமனையைச் சேர்ந்த, கண் மருத்துவ நிபுணர்கள், மருத்துவ பரிசோதனை செய்கின்றனர். கண்புரை நோய் உள்ளவர்கள், அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, இலவசமாக, விழிலென்ஸ் பொருத்தி, அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. போக்குவரத்து, தங்குமிடம், உணவு மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பின், மீண்டும் முகாம் நடைபெறும் இடத்திற்கு வரும் வரை, அனைத்து வசதிகளும் இலவசமாக செய்து தரப்படும். முகாமில் பங்கேற்க விரும்புவோர், 97914 08768, 95438 81888 என்ற மொபைல் எண்களிலும், பெரிய காஞ்சிபுரம் சாலைத் தெருவில் உள்ள, ஆனந்தா டிரேடர்ஸ் அரிசி மண்டியிலும், முன்பதிவு செய்யலாம் என, கண் சிகிச்சை முகாம் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
15-Sep-2025