மேலும் செய்திகள்
வேலை வாய்ப்பு முகாமில் 500 பேருக்கு பணி ஆணை
22-Sep-2024
காஞ்சிபுரம்:வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாநகராட்சி, பூக்கடைசத்திரம் பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யும் பணியினை நேற்றுமுன்தினம் காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், கைத்தறித் துறை அமைச்சருமான காந்தி அவர்கள் தலைமையில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், காஞ்சிபுரம் - எம்.எல்.ஏ., எழிலரசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் ஜவஹர்லால் நேரு சாலை சந்திப்பில், பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யும் பணியை காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் நேற்று ஆய்வு செய்தார்.பாதாள சாக்கடை அடைப்பு சீரமைப்பு பணியை விரைந்து முடிப்பதோடு, சீரமைப்பு பணிக்ககாக பள்ளம் தோண்டப்பட்டு சேதமான சாலையை உடனே சீரமைக்கவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.ஆய்வின்போது, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, மின்வாரிய அதிகாரிகள் உடனிருந்தனர்.
22-Sep-2024